புரட்சியாளர்


மறைந்த பின்பும் அரைநாழிகை

மருள் உடன் போராடும் செங்கதிர்களாய்,

உடல் விரைத்த பின்னும் உலகம் சொல்லும்

பெயரது, ஒலியோ மொழியோ கடத்தும்

ஊடகம் மறக்காத பெயரது.

 

சாதியெனும் சகதிக்குள்ளே பிரளும்

சண்டாள தலைவர்களும்

வீதியிலே வீழ்ந்து கிடக்கும் தேசத்

தலைமகன்களின் தலைகளும் ,

     

போதை எனும் பானம் உண்டு

புலம்புகின்ற பொய்ப்புலவர்களும்,

ராசாவுக்கு கூசா ஏந்தும் பத்திரம்

இல்லா தரித்திரங்களும்,

சாதியெனும் சதி வலையில் சமூகம் திணற

வலைபின்னும் சிலந்திகள்

செவ்வுதிரம் கூலி கேட்கும்.


மார்க்கம் கொண்ட மாமனிதன் - சதிக்கும்

நிதிக்கும் மத்தியில் நீதி வலுக்க தோன்றிய பெரும்தலைவன்,

சாதிக்கும், சுயநலவாதிகளுக்கும் மத்தியிலே 

இன்று மதிப்பார் அற்ற மணல்சிலையாய்

விதியால் வீதிக்கு வந்து நிற்கிறார்

அங்கும் விடவில்லையே ஆய்ந்த ரோஜாமுட்கள்கோர்த்த 

ஆறடி மாலைகள் ஆரத்தழுவுவதேன்?


-சி.சதுர்

Comments

Popular Posts