கூன் விழுந்த நட்சத்திரம்

கூன் விழுந்த நட்சத்திரம் 
கூரை பெயர்த்தே முற்றம் விழ
முளைத்தது பால்வெளி

நான் விழுந்த இடம் - அவள்
நயனங்களிடை மிதக்கும்
மஞ்சள் நிலவொளி

நீர் விழும் தடம் 
கரிக்கிறது - சுடுமேகமாய்
மனம் நிலவு எரிக்கிறது

காணாத தேசம் என்
கால்சென்றாலும் - கண்
தேடும் வானத்தில் நீ

காற்றைக் கிறுக்கும் விரல் - 
கவிதைத் தூறலில் நனைந்து 
புகைவிடும் மனத்தீ

காகிதம் நிறைக்கும் கனத்துடன் 
கையில் பேனை- சில்லிடும்
மைக்கறை உன்னால்

சொல்லிடும் இடுக்கில்
உன்முகம் - முற்றுப்புள்ளிகள் 
மறக்கிறேன் உன்னால்

முடிவிலா ஓர் கவி, காற்றில்
மடித்து - அதன் காதில் உன்
முகவரி சொல்வேன்













Comments

  1. "நீர் விழும் தடம்
    கரிக்கிறது - சுடுமேகமாய்
    மனம் நிலவு எரிக்கிறது"
    இவ்வரிக்குரிய விளக்கத்தை கவி அறியத்தருவீர்களா?

    ReplyDelete
  2. 'நீர் விழும் தடம்' கரிப்பது சோகத்தையும்,
    சுடுமேகத்தில் நிலவு - தவிப்பையும் குறிக்கிறது.

    ReplyDelete
  3. அடடா எத்தனை அழகான வர்ணனை!!

    ReplyDelete

Post a Comment

Popular Posts